சிந்தித்துப் பார், நீ, நீங்கள் யார் என்று !
அட முட்டாள்களா !
உங்கள் தமிழை பாப்பான் நீசமொழி என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்
சாத்திரங்களில் எழுதி வைத்து, சாமிகள் இருக்குமிடத்தில் புகாமல் விரட்டி
அடித்ததோடு மாத்திரமல்லாமல், உன்னையும் புகவிடாமல், தீண்டாதவனாக ஆக்கிவைத்திருக்கிறானே !
இதற்கு நீ என்றாவது வெட்கப்பட்டாயா ? உங்களப்பன்
வெட்கப்பட்டாரா ?
அவனை விட்டுவிட்டு என்னிடம் வந்து மோதிக் கொள்கிறாயே ?
இதற்கு அறிவில்லை
என்று பெயரா ?
மானமில்லை என்று பெயரா ?
நீ யாருக்குப் பிறந்தவன் ? என்று என்னைக் கேட்கிறாய் !
நான் கேட்கிறேன், உன் தமிழையும், உன்னையும் உள்ளே
விடாமல், இரண்டையும் வெளியில் நிறுத்தி கும்பிடு போடும்படி பாப்பான்
செய்கிறான் ! நீயும் அதற்கேற்ப அடங்கி ஒடுங்கி நின்று குனிந்து கும்பிடுகிறாயே, மடையா ! மானங்கெட்டவனே !
நீ யாருக்குப் பிறந்தவன் என்று கேட்கிறேன் !
தமிழ் உயர்ந்த மொழியானால், தமிழன் கலப்படமற்ற சுத்தப் பிறவியானால், தமிழ் பேசுகிறவன் தமிழன் என்கிற காரணத்திற்கு ஆக உன்னைச் சூத்திரன், பாப்பானின் வைப்பாட்டி மகன் என்று கடவுள் சொன்னதாக சாத்திரம் எழுதி வைத்து, கீதை, வெங்காயம் சொல்கிறது என்று சொல்லி உன்னை தீண்டாத சாதியாக
பாப்பானும், அவன் பெண்டாட்டி, பிள்ளை, ஆத்தாள், அக்காளும் நடத்துகிறார்களே,
நீ நாக்கைப் பிடுங்கிக் கொண்டாயா ?
நீ யாருக்குப் பிறந்தாய் என்பது பற்றி சிறிதாவது சிந்தித்து இருந்தால், என்னை நீ யாருக்குப் பிறந்தாய் என்று கேட்டு இருக்கமாட்டாய் !
எனக்கு, நான் யாருக்குப் பிறந்தேன் என்பது பற்றிக் கவலை இல்லை !
அது என் அம்மா சிந்திக்க வேண்டிய காரியம் !
நான் யாருக்குப் பிறந்தேன் என்று என்னாலும் சொல்ல முடியாது, நீ யாருக்குப் பிறந்தாய் என்று, உன்னாலும்
சொல்லமுடியாது !
அந்தப் பிரச்சனையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும்
தான் தேவை !
யாருக்குப் பிறந்தாலும், மனிதனுக்கு, மானம் தேவை !
அது உன்னிடம் இருக்கிறதா ? என்னிடம் இருக்கிறதா ! என்பது தான்
இப்போது சிந்திக்க வேண்டிய தேவை !
தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதால் உனக்குப் பொத்துக் கொண்டது !
ஆனால், தமிழன் ஈன சாதிப் பயல் என்று கூறி உன்னை ஈனசாதியாக
நடத்துவது பற்றி உனக்கு எங்கும் பொத்துக் கொள்ளவில்லை !
அதுமாத்திரமல்ல, முட்டாள் பசங்கள் உன்னை ஈனசாதியாய் நடத்துகின்றவர்கள்
காலில் விழுகிறீர்கள், அவனை சாமி என்று கூறுகிறீர்கள், பாப்பான் என்று ஒப்புக்கொள்ளுகிறீர்கள் !
சிந்தித்துப்
பார், நீ, நீங்கள் யார் என்று !
- தந்தைப் பெரியார்
அவர்கள் !